இரா.சம்பந்தனின் இறுதிநிகழ்வில் தமிழக தலைவர் அண்ணாமலை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சம்பந்தனின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக திருகோணமலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று வருகின்றன.
இன்னும் சற்று நேரத்தில் இறுதி ஊர்வலம் இடம்பெறவுள்ள நிலையில், சம்பந்தனின் வீட்டுக்குச் சென்று, அன்னாரின் பூதவுடலுக்கு அரசியல்வாதிகள், பிரமுகர்கள் மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



