சீன அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள வீடுகளுக்கான பொருட்கள் வந்தடைவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின் வீடுகள் அமைப்பதற்காக பொருட்கள் கிளிநொச்சியை வந்தடைந்தது.
எட்டு பாரவூர்திகளில் வீடுகளுக்கான பொருட்கள் கிளிநொச்சிக்கு கொண்டு வரப்பட்டன.
குறித்த பொருத்து வீடுகளைக் கொண்ட பார ஊர்திகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பார்வையிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 64 வீடுகள் இவ்வாறு வழங்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது



