2024 ஐரோப்பிய கால்பந்து போட்டி : அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
2024 ஐரோப்பிய கால்பந்து போட்டி : அரையிறுதிக்கு தகுதி பெற்ற இரு அணிகள்!

2024 ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் தகுதி பெற்றன. 

காலிறுதியில் சுவிட்சர்லாந்தை எதிர்த்து இங்கிலாந்து விளையாடியது. வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்திருந்தன.  

பின்னர் பெனால்டி உதை மூலம் போட்டியின் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்பட்டனர். பெனால்டி உதை மூலம் 5க்கு 3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. 

மற்றொரு போட்டி நெதர்லாந்து மற்றும் துருக்கி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் நெதர்லாந்து அணி ஒன்றுக்கு 2 கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி, இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி புதன்கிழமை நடைபெறவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!