முரல் மீன் குத்தியதில் மீனவர் மரணம் - யாழில் மீன்பிடிக்க சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

#SriLanka #Jaffna #Death #Fisherman
Mayoorikka
1 year ago
முரல் மீன் குத்தியதில் மீனவர் மரணம் - யாழில் மீன்பிடிக்க சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றவர் முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. 

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. குருநகர் 5 மாடி கட்டிடப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 29 வயதுடைய மைக்கேல் கொலின் டினோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 உயிரிழந்தவரின் சடலம் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!