பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தமது கோரிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது பிரச்சினைகளுக்கு இன்று (02.07) அல்லது நாளை (03.07) தீர்வை வழங்குவதற்கு அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் இணைத் தலைவர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார்.
நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தங்களில் இருந்து விலக மாட்டோம் என அமைச்சர் ராகவனிடம் தெளிவாக தெரிவித்தோம்.
இந்த தொழில் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட 2017ம் ஆண்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட மாதாந்திர உதவித்தொகை அவ்வாறே எமக்கு வழங்கப்பட வேண்டும்.அதன்படி அவர்கள் இந்த விடயத்தை முன்வைப்பதாக ஒப்புக்கொண்டனர். அமைச்சரவைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம் என்றார்.



