நடுகடலில் காப்பாற்றப்பட்ட மீனவர் கடற்படையினரிடம் ஒப்படைப்பு!

டெவோன் 5 பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து தனது உயிரைக் காப்பாற்றிய மீனவர் நேற்று (30.06) இரவு கடற்படையின் "விஜயபாகு கப்பலுக்கு" அழைத்துச் செல்லப்பட்டதுடன், கப்பல் தற்போது தரையிறக்கப் பயணித்து வருவதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
பல நாள் மீன்பிடி பயணத்தின் காரணமாக ஆறு மீனவர்களில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
கப்பலின் தலைவர் 42 வயதான நயன காந்த, 24 வயதான பதும் தில்ஷான், 32 வயதான சுஜித் சஞ்சீவ, 33 வயதான பிரதீப் நிஷாந்த மற்றும் 68 வயதான அஜித்குமார் ஆகிய 5 மீனவர்களே உயிரிழந்துள்ளனர்.
தங்காலை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து டெவோன் 5 என்ற பல்நாள் மீன்பிடிக் கப்பல் கடந்த 6ஆம் திகதி 6 மீனவர்களுடன் சர்வதேச கடற்பரப்புக்கு சென்றது.
இந்த மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, கடலில் மிதந்த போத்தலில் இருந்த திரவத்தை மது என நினைத்து குடித்துள்ளனர்.



