ஆமணக்கு உட்கொண்ட சிறுவர்களுக்கு நேர்ந்தக் கதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஆமணக்கு சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தச்சமரடம் பகுதியில் நேற்று (28.06) பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு பருப்பை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



