ஜனாதிபதியின் உரை மீதான விவாதம் நடாத்த கோரிக்கை!
#SriLanka
#Sri Lanka President
#Parliament
Mayoorikka
1 year ago

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரை மீதான விவாதத்தை நாளை மறுதினம் கோருவதற்கு எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இது தொடர்பான பிரேரணை இன்று(28) இடம்பெறவுள்ள பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, அங்கு பாராளுமன்றத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் தீர்மானங்கள் எடுக்கப்பட உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் 02 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தின் விசேட கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமர் இந்த அழைப்பை விடுத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.



