உலக வெற்றிகளை அடைய மனிதன் தியாகத்துடன் செயல்பட வேண்டும் - ஜனாதிபதியின் ஹஜ் வாழ்த்து செய்தி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
உலக வாழ் இஸ்லாமியர்கள் இன்று ஹஜ் பெருநாளை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட செய்தியில், ஆன்மீக மற்றும் உலக வெற்றிகளை அடைய மனிதன் சுயநலத்தை விடுத்து தியாகத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழப் பழக வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் இடையில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை விதைக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டமானது உலக அமைதிக்கான சிறந்த செய்தியையும் தெரிவிக்கின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.