ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் வீடு மீது தாக்குதல் - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர் கண்டனம்
#SriLanka
#Attack
#Journalist
#Media
#condemn
Prasu
1 year ago
ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபன் அவர்களின் வீட்டிற்கும் உடமைகளுக்கும் சேதமேற்படும் வகையில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இது கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ளத் தைரியமற்ற கோழைகளின் அற்பத்தனமான சட்டவிரோத செயற்பாடாகும்.
இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைக் கைதுசெய்வதற்கு பொலீசார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோருவதோடு, பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு எமது ஆதரவைத் தெரிவிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.