சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதால் கிரிக்கெட் வீரர்களை மாற்ற முடியாது - ஹரின் பெர்னாண்டோ!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சமூக வலைத்தளங்களில் விமர்சிப்பதால் கிரிக்கெட் வீரர்களை மாற்ற முடியாது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (12.06) செய்தியாளர் மாநாட்டை நடத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், கடந்த இரண்டு போட்டிகளின் தோல்வியின் அடிப்படையில் இலங்கை வீரர்களை சிறுமைப்படுத்துவது நியாயமற்றது எனக் கூறியுள்ளார்.
அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது மற்றும் பொய்யானது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.



