கெஹலிய சமர்பித்த மனு மீதான விசாரணை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கெஹலிய சமர்பித்த மனு மீதான விசாரணை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் திரு.கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த மனுவை எதிர்வரும் 27ஆம் திகதி மேலதிக பரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கு விசாரணை முடியும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பிலேயே நீதிபதி மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இந்த மனு இன்று (11.06) மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!