கல்முனையில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய வைத்தியர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கல்முனை பகுதியில் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய சாரதி ஒருவர், இளைஞர் ஒருவர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
குறித்த விபத்தில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய வைத்தியரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் பயணித்த வாகனமும் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்போது வைத்தியரிடம் சாரதி அனுமதிபத்திரம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.