பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான முதல் படியாக பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏகல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட செபலோஸ்போரின் தடுப்பூசி மற்றும் மெல்டோல் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “உண்மையான விடயம் பேசப்படாமல் கிசுகிசுக்கள் பேசி பிரயோசனம் இல்லை. இன்று மக்கள் கட்சி அரசியலால் சலிப்படைந்துள்ளனர்.
சில மாதங்களில் திவாலாகிவிடுவோம்.ஆனால் இது முடிவல்ல. அதே இடத்தில், நாங்கள் மீண்டும் ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், மதிப்புக் கூட்டல் போன்ற பல முடிவுகள் எடுக்கப்பட்டன” எனத் தெரிவித்துள்ளார்.



