விசாரணைகளின் பின்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்

#SriLanka #Trincomalee #Student
Mayoorikka
1 year ago
விசாரணைகளின் பின்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும்

பரீட்சை ஒழுங்கு விதிகளை மீறுவது பரீட்சை சட்டங்களை மீறுவதாகவே கருதப்படும். இதனை இன,மொழி அடிப்படையில் பார்க்க முடியாது எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெகுவிரைவில் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான முஜிபுர் ரஹ்மானினால் எழுப்பப்பட்ட அதிபர் சேவை பரீட்சைக்கு மேல் மாகாணத்தில் தோற்றிய 13 பேர் ஹிஜாப் அணிந்த வகையில் பரீட்சைக்கு தோற்றியதற்காக அவர்களின் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

 ஹிஜாப் அணிந்த வகையில் தேசிய பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. பரீட்சார்த்தியின் காதுகள் தென்படும் வகையில் அவர் இருத்தல் வேண்டும் என பரீட்சை மத்திய நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டால் அதற்கு பரீட்சார்த்தி கட்டுப்பட வேண்டும்.அவ்வாறு இல்லாவிடின் அவரை பரீட்சை மண்டபத்தில் இருந்து வெளியேற்ற முடியும்.

 மேல் மாகாணத்தில் அதிபர் பரீட்சைக்கு தோற்றிய 13 பேர் ஹிஜாப் அணிந்த வண்ணம் பரீட்சைக்கு தோற்றியதாக குறித்த பரீட்சை நிலையத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டு பரீட்சைகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து இவர்களின் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஆகவே இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென்றார். 

 முஸ்லிம் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகள் ஹிஜாப் அணிந்த வண்ணம் பரீட்சைகளுக்கு தோற்றும் போது பல பிரச்சினைகளை எதிர்க்கொள்கிறார்கள்.ஆகவே இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.

 முஜிபூர் ரஹ்மான் எம்.பி. மேல்மாகணத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை சுட்டிக்காட்டினார்.இவ்விடயம் குறித்து ஆராய்ந்து தகவல்களை பெற்றுள்ளேன். ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றியதால் பெறுபேறு இரத்து செய்யப்படமாட்டாது. தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அதனை தொடர்ந்து பரீட்சை பெறுபெறுகள் வெளியிடப்படும்.

காதுகளை மறைத்த வண்ணம் ஹிஜாப் அணிந்திருக்கும் போது சூட்சமான முறையில் காதுகளுக்குள் கருவிகளை வைத்திருக்க முடியும்.

இவ்வாறான நிலையில் தான் காதுகள் தென்படும் வகையில் அணியுமாறு குறிப்பிடப்படுகிறது இதேவேளை இதேபோனதொரு பிரச்சினை திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளுக்கும் ஏற்பட்டுள்ளது இந்த மாணவிகளின் பரீட்சை பெறுபேறு நிறுத்தப்படவில்லை இடைநிறுத்தப்பட்டுள்ளது விசாரணைகள் முடிந்த பின்னர் வெகுவிரைவில் பெறுபேறுகள் வெளியிடப்படும். பரீட்சை ஒழுங்கு விதிகளை மீறுவது பரீட்சை சட்டங்களை மீறுவதாகவே கருதப்படும்.இதனை இன,மொழி அடிப்படையில் பார்க்க முடியாது என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!