இஸ்ரேலின் இராணுவ தளத்தை குறிவைத்த ஏமனின் ஹவுத்திகள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இஸ்ரேலின் துறைமுக நகரமான ஈலாட்டில் உள்ள இராணுவ தளத்தை புதிய பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் குறிவைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானிய ஆதரவு குழுவின் இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரீ இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
ஹுதிகள் குழு இராணுவ தளத்தை குறிவைத்தபோது பாலஸ்தீனம்' என்ற பாலிஸ்டிக் ஏவுகணை இன்று முதல் முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை அதன் நோக்கத்தை வெற்றிகரமாக அடைந்துள்ளது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.



