தைவான் ஓபன் தடகள போட்டியில் முதலிடத்தை பிடித்த இலங்கையர்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தைவான் ஓபன் தடகள விழாவில், 400 மீற்றர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இலங்கையை சேர்ந்த இரு வீரர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.
அருண தர்ஷன் மற்றும் தருஷி கருணாரத்ன ஆகியோர் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர்.
ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அருண தர்ஷன் 45.82 வினாடிகளிலும், தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 400 மீற்றர் போட்டியை 52.48 வினாடிகளிலும் கடந்து வெற்றி பெற்றனர்.



