அடுத்த 36 மணித்தியாலங்கள் கொட்டி தீர்க்கவுள்ள மழை : வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (01.06) மாலை 06 மணிமுதல் அடுத்த 36 மணித்தியாலம் வரை செல்லுப்படியாகும் வகையில் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களத்தின் அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



