தென்மேற்கு ஜெர்மனியில் பதற்றம் : பொலிஸ் அதிகாரி உள்பட 06 பேர் மீது கத்தி குத்து தாக்குதல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
தென்மேற்கு ஜேர்மனியின் Mannheim நகரில் உள்ள சந்தை சதுக்கத்தில் ஒரு நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்தவர்களில் ஒருவர் சதுக்கத்தில் பேரணி நடத்தத் தயாராகி வந்த இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர் மைக்கேல் ஸ்டெர்சன்பெர்க் என்று வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது, அந்த நபர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு, உதவிக்கு சென்ற காவல்துறை அதிகாரியை தாக்கினார்.
அதன்போது, தாக்குதல்தாரி மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தியவர் ஆப்கானிஸ்தானில் பிறந்து ஜெர்மனியில் வசிக்கும் 25 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே