தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், நாட்டில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இன்று (30) காலை வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை அறிவிப்பு அதைச் சுட்டிக்காட்டுகிறது. 

இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் சில இடங்களில் 75 மி.மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு எல்லைகளிலும் வடமத்திய, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது சூறாவளியானது 50-60 கி.மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!