கிளிநொச்சியில் 02ஆம் மொழி கற்கையை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
2ம் மொழி கற்கையினை பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களிற்கான பயிற்சி நிறைவு நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.
கிளிநொச்சி வைத்தியசாலை பணிப்பாளர் பூர்ணிமா விமலரட்ண பிரதம அதிதியாக கலந்து கொண்டார். நிகழ்வில் மொழிகள் பயிற்சி திணைக்கள உத்தியோகத்தர்கள், பயிற்சி நிறைவு செய்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
குறித்த பயிற்சியில் 75 உத்தியோகத்தர்கள் 200 மணித்தியாளம் 2ம் மொழி பயிற்சியை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.