கொழும்பின் பல வீதிகள் மூடப்படவுள்ளதாக அறிவிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கொழும்பில் பல வீதிகளை இன்று (25.05) இரவு மூடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், கனத்த சுற்றுவட்டத்தில் இருந்து தும்முல்லை சந்தி, பௌத்தலோக மாவத்தை, சர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் சுற்றுவட்டத்திலிருந்து ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான வீதிகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார்.