இலங்கை சுற்றுலா விசாவில் மேற்கொள்ளபட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கை சுற்றுலா விசாவில் மேற்கொள்ளபட்டுள்ள மாற்றங்கள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

இலங்கையின் சுற்றுலா விசாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை மாலைதீவு வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது. 

தற்போதைய நடைமுறையின் படி மாலைதீவு பிரஜைகள் இலங்கைக்கு வந்த பின்னர் 30 நாட்கள் சுற்றுலா விசாவை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், மாலத்தீவு பிரஜைகள் 30 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு, https://www.srilankaevisa.lk/ ஐப் பார்வையிடுவதன் மூலம் 6 மாத இலவச விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும், இந்த விசாவிற்கு நிர்வாகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 ஏற்கனவே இலங்கையில் இருக்கும் மாலைதீவு பிரஜைகள் விசா நீட்டிப்பு தேவைப்படுபவர்கள் கொழும்பில் உள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ள முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கையின் சுற்றுலா விசாக்களில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கம் தேடுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். 

 இலங்கையில் புதிய இ-விசா முறையின் அறிவிப்புடன், மாலைதீவு சுற்றுலாப் பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்ய, இலங்கை பிரதிநிதிகளுடன் மாலைதீவு வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 

அத்துடன், இலங்கைக்கு வரவிருக்கும் மாலைத்தீவு குடியிருப்பாளர்கள் மேலதிக உதவிகள் தேவைப்படின் அமைச்சுக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!