வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிப்பு : நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

களு கங்கையின் அத்தனகலு ஓயா மற்றும் குடோ கங்கை உப வடிநிலங்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
மே 20 ஆம் திகதி விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அதாவது நாளை (25.05) இரவு 9 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள் தெரிவிக்கப்படுவதுடன், அவ்வழியாக செல்லும் சாரதிகளும் அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



