கண்டி நோக்கி பயணித்த பேருந்துக்கு நேர்ந்தக் கதி : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
3 weeks ago
கண்டி நோக்கி பயணித்த பேருந்துக்கு நேர்ந்தக் கதி : சாரதிகளுக்கு எச்சரிக்கை!

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளது. 

ஹட்டன்-கண்டிவார் பிரதான வீதியின் தியகல பிரதேசத்தில் இன்று (23.05) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நிலவும் மோசமான காலநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை பேருந்து சபைக்கு சொத்தமான பஸ் வண்டியின் முன்னால் மரக்கிளை ஒன்று வீழ்ந்துள்ளது.

 இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி லேசாக சேதமடைந்துள்ளதுடன், பயணிகளுக்கு பாதிப்பில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால், சாலைகளில் வாகனங்களை ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.