சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க நடவடிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வெசாக் பண்டிகையை முன்னிட்டு கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இருந்தும் 278 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகளும், மஹர சிறையிலிருந்து 37 கைதிகளும் இங்கு விடுவிக்கப்பட உள்ளனர்.
விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் 10 பெண் கைதிகளும் உள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கைதிகளை பார்வையிடுவதற்கு இன்றும் நாளையும் விசேட சந்தர்ப்பம் வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.