கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய ரயில் பாதைகள் - மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை
#SriLanka
#Colombo
#Railway
#Rain
Lanka4
1 year ago

கடும் மழை காரணமாக கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான ரயில் பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகப் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று (21) கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து புத்தளம் வரையான ரயில் சேவையில் ஒரு நாளைக்கு நான்கு ரயில்கள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .



