இத்தாலியில் இடம்பெற்ற ஓட்டப் பந்தயந்தில் நான்காவது இடத்தை பெற்ற இலங்கையர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Italy
Dhushanthini K
1 year ago

இத்தாலியில் நேற்று (18.05) இடம்பெற்ற ஓட்டப் பந்தயத்தில் குறுகிய தூர ஓட்டப் போட்டியில் சம்பியனான யுபுன் அபேகோன் நான்காவது இடத்தைப் பெற்று வெற்றியீட்டியுள்ளார்.
அவர் முடித்த நேரம் 10.21 வினாடிகள். அந்த போட்டியில் டோக்கியோ பதக்கம் வென்ற ஜேக்கப் மார்ஷல் முதலிடம் பெற்றார். அவர் முடித்த நேரம் 10.07 வினாடிகள். யுபுன் அபேகோன் பந்தயத்தை 10.00 வினாடிகளுக்குள் முடிக்க முடிந்தால், அவர் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற முடியும்.
ஆனால் அந்த போட்டியில் அவரால் அந்த நிலையை எட்ட முடியவில்லை மேலும் பல போட்டிகள் எதிர்காலத்தில் நடைபெற உள்ளதால், அந்த போட்டிகளில் அவர் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.



