கிளிநொச்சியில் கடும் மழையினால் இடிந்து விழுந்த வீடு : அவசரகால உதவிகள் வழங்கிவைப்பு!
#SriLanka
#Kilinochchi
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கிளிநொச்சி - ஜெயபுரம் பகுதியில் இன்று (15.05) பெய்த கடும் மழையில் வீடொன்று இடிந்து விழுந்துள்ளது.
இதில் குறித்த வீட்டில் வசித்து வந்தவர்களின் உடமைகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் அங்கத்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்தினர் அவர்களுக்கு தேவையான அவசரகாலஉதவிகளை வழங்கிவைத்துள்ளனர்.



