இந்தோனேசியாவில் சீரற்ற காலநிலையால் முப்பத்திற்கும் மேற்பட்டோர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக 84 வீடுகள், 16 பாலங்கள் மற்றும் இரண்டு வழிபாட்டுத் தலங்கள் சேதமடைந்துள்ளன.
90 பேர் இடம்பெயர்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டவர்கள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் மேற்கு சுமத்ராவை பாதித்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 26 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.