பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது!
#SriLanka
#Police
#Tamilnews
#sri lanka tamil news
#Justice
Dhushanthini K
1 year ago
பொலிஸாரால் நடைமுறைப்படுத்தப்பட்ட நீதி நடவடிக்கையின் ஆரம்பம் முதல் இதுவரை 111,074 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 4,472 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் திரு. நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் 41 கிலோ ஹெரோயின், 43 கிலோ ஐஸ் போதைப்பொருள், 03 லட்சம் போதைப்பொருள் மற்றும் 1,500 மில்லியன் ரூபா சட்டவிரோத சொத்துக்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.