பிரேசில் கனமழை மற்றும் வெள்ளம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு

#Death #Brazil #Flood #HeavyRain #Missing
Prasu
1 week ago
பிரேசில் கனமழை மற்றும் வெள்ளம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 107 ஆக உயர்வு

தெற்கு பிரேசிலில் உள்ள ரியோ கிராண்டே சுல் மாநில தலைநகர் போர்டோ அலெக்ரே உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டிவருகிறது.

இதனால் அந்த நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சாலைகள் அனைத்தும் ஆறுகளாக மாறிவிட்டன. பாலங்கள்,ரோடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. 

வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 107- ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 134 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. 

படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 65 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

வரும் நாட்களிலும் தெற்கு பிரேசில் பகுதியில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.