பால்டிமோர் பாலம் விபத்து - இறுதி நபரின் சடலம் மீட்பு

#Death #Accident #America #Body #Bridge
Prasu
2 years ago
பால்டிமோர் பாலம் விபத்து - இறுதி நபரின் சடலம் மீட்பு

இலங்கை வரும் போது மோதிய கப்பலால் அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்ட உடல் மார்ச் 26ஆம் திகதியன்று பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததில் இறந்த ஆறாவது மற்றும் இறுதி நபர் என்று நம்பப்படுகிறது.

அவர் மேரிலாந்தின் பால்டிமோர் பகுதியைச் சேர்ந்த 37 வயதான ஜோஸ் மைனர் லோபஸ் ஆவார். பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் 213 மில்லியன் பவுண்டுகள் எடையுள்ள சரக்குக் கப்பல் மோதியதில், அதை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இடிந்து விழுவதற்கு முன்பு, ஒவ்வொரு நாளும் சுமார் 30,000 மேரிலேண்டர்கள் பாலத்தைப் பயன்படுத்தினர். விபத்தில் உயிரிழந்த 6 கட்டுமான தொழிலாளர்கள் ஹோண்டுராஸ், எல் சால்வடார், மெக்சிகோ மற்றும் கவுதமாலா ஆகிய நாடுகளில் இருந்து குடியேறியவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பாலத்தை புனரமைக்கும் பணி மற்றும் பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து குப்பைகளை அகற்றுவது ஆகிய இரண்டும் மிகவும் கடினமான பணிகளாக இருந்ததாக மாநில மற்றும் மத்திய அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், அமெரிக்க ராணுவப் பொறியாளர்கள் 700 அடி அகலம், 50 அடி ஆழம் கொண்ட ஃபெடரல் நேவல் கால்வாயை இந்த மாத இறுதிக்குள் பால்டிமோர் துறைமுகத்திற்குச் செல்லும் முழுமையாக மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது.

 இத்திட்டத்திற்காக இதுவரை 60 மில்லியன் டொலர்களை அவசர நிவாரண நிதியாக மேரிலாந்து பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4