வடமாகாணத்தில் நிலவும் கடும் வெப்பநிலையால் அவதிப்படும் மக்கள்!
#SriLanka
#Vavuniya
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில் வீதியால் செல்வோருக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா கிளையினர் குளிர்பானங்களை வழங்கியிருந்தனர்.
அண்மைக்காலமாக வட மாகாகணம் உட்பட பல இடங்களிலும் வெயிலின் உச்சத்தால்மக்கள் பெரும் அவதிப்படும்நிலை காணப்படுகின்றது.
இந் நிலையில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் வவுனியா கிளையினர் வவுனியா மன்னார் வீதியில் செல்வோருக்கு குளிர்பானங்களை வழங்கியிருந்ததுடன் பலர் ஆர்வத்துடனும் வெயில் காரணமாகவும் குளிர்பானத்தை ஆவலுடன் வேண்டி பருகியதை காண முடிந்தது.



