இந்தோனேசியாவில் நிலவும் சீரற்ற வானிலை : 14 பேர் பலி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள லுவு மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
13 துணை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.