வரலாற்றில் முதல்தடவையாக ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அந்தஸ்து!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
1 year ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக சிரேஷ்ட சட்டவாதிகள் ஐவருக்கு ‘சிரேஷ்ட அறிவுறுத்தல் சட்டத்தரணி' அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.
கலாநிதி ஜே.எம். சுவாமிநாதன், டி.எம். சுவாமிநாதன், ஜி.ஜி. அருள்பிரகாசம், எச்.ஆர்.ஏ.டி.பி. குணதில மற்றும் எஸ்.என்.எம். குணவர்தன உள்ளிட்டோருக்கே இந்த அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.
சட்டத் தொழிலில் சிறந்து விளங்குகின்றமை மற்றும் உயர்வான பண்புகளை வௌிப்படுத்தும் வகையில் அறிவுறுத்தல் சட்டத்தரணிகள் ஆற்றும் சிறப்பான சேவையைப் பாராட்டும் வகையில், 2023 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் மேற்படி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது.