மட்டக்களப்பில் அரியவகை கஜமுத்துக்களுடன் நபர் ஒருவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
மட்டக்களப்பில் அரிய வகை கஜமுத்துக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 2.05 கோடி ரூபாய் பெறுமதியான யானைகளை கொன்று பெறப்பட்ட அரியவகை கஜமுத்துக்கள் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைதான சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பில் சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கிடைக்கப்பெற்ற புலானாய்வு தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் 30 வயது மதிக்கத்தக்க மயிலவெட்டுவான் பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் சட்ட நடவடிக்கைக்காக அதிரடிப்படையினரால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.