மீண்டும் அமீரகத்தில் மழை: டுபாய் தேசிய வானிலை ஆய்வு மையம்

#weather #Rain #Dubai
Mayoorikka
2 years ago
மீண்டும் அமீரகத்தில் மழை: டுபாய் தேசிய வானிலை ஆய்வு மையம்

அமீரகத்தில் கடந்த 16ஆம் திகதி பெய்த வரலாறு காணாத மழையால் அமீரகம் ஸ்தம்பித்தது. இதில் துபாய், சார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கின.

 இந்த நிலையில் சரியாக ஒரு வாரம் கழித்து நாட்டில் மீண்டும் மழை பெய்ய  கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தால் கணக்கு கணிக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பாக தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பில் வருகின்ற ஏப்ரல்21, 22 அன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மிதமான காற்று வீசும் என்றும் பின்னர் அது வடமேற்கு நோக்கி நகர்ந்து மணிக்கு 15 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

 பின்னர் படிப்படியாக காற்றின் வேகம் அதிகரித்து மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் துபாய் தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4