வங்கதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் 14 பேர் உயிரிழப்பு
#Death
#Accident
#Road
#Bangladesh
#vehicle
Prasu
2 years ago
வங்கதேசத்தின் பரீத்பூர் பகுதியில் உள்ள தாக்கா-குல்னா நெடுஞ்சாலையில் இன்று பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வங்கதேச அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே