வங்கதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் 14 பேர் உயிரிழப்பு
                                                        #Death
                                                        #Accident
                                                        #Road
                                                        #Bangladesh
                                                        #vehicle
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 year ago
                                    
                                 
                வங்கதேசத்தின் பரீத்பூர் பகுதியில் உள்ள தாக்கா-குல்னா நெடுஞ்சாலையில் இன்று பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேரும், மருத்துவமனையில் ஒருவரும் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு வங்கதேச அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            