சிட்னி கத்தி குத்து சம்பவம் : தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

#SriLanka #world_news #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
சிட்னி கத்தி குத்து சம்பவம் : தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

சிட்னியில் இடம்பெற்ற கத்தி குத்துச சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் இன்று (14.04)  தாக்குதல்தாரியான   ஜோயல் காச்சி என்பரே தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அத்துடன் ஜோயல் காச்சி மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எவ்வாறாயினும் குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்டபோது பெண் பொலிஸ் அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.