ஹம்பேகமுவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு : இருவர் படுகாயம்!
#SriLanka
#GunShoot
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஹம்பேகமுவ பிரதேசத்தில் நேற்று (12.04) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
ஹம்பேகமுவ சீனுகல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த இருவர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டின் உரிமையாளரும் அவரது உறவினர்களும் விருந்தில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் 24 வயது மற்றும் 42 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹம்பேகமுவ மற்றும் எம்பிலிபிட்டிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



