மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நலன்புரிக் கொடுப்பனவு!
#SriLanka
#money
Mayoorikka
2 years ago
மேன்முறையீடுகளும் ஆட்சேபனைகளும் பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர் அஸ்வெசும கொடுப்பனவை பெறுவதற்கு மேலும் 1,82,140 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இவர்களுக்கான நிலுவைத்தொகை உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளையும் ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதியாகும்போது வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 18,54,000 பேர் தற்போது அஸ்வெசும கொடுப்பனவை பெறுவதுடன், அதற்காக 58.5 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.