ஜனாதிபதியின் பிரதானியிடம் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
1 year ago

தரமற்ற தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்கவிடம் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலஞ்சம், ஊழல் மற்றும் வீண் விரயத்துக்கு எதிரான குடிமக்கள் சபையின் தலைவர் ஜமுனி கமந்த துஷார இது தொடர்பான முறைப்பாட்டை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தரமற்ற தடுப்பூசிக் கொள்வனவு தொடர்பான விசாரணைகள் 100 நாட்களுக்கு மேலாகியும் அதற்குப் பொறுப்பான சில அரச அதிகாரிகளை கைது செய்யத் தவறியுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



