மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்தில் நான்காவது பங்குனித் திங்கள் உற்சவம் வெகு விமர்சை!
#SriLanka
#Jaffna
Mayoorikka
1 year ago

யாழ்ப்பாணம் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் ஆலயத்தில் நான்காவது பங்குனித் திங்கள் உற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை (08) நடைபெற்றது.
பன்றித்தலைச்சி கண்ணகை அம்மனுக்கு பொங்கல் பூஜை செய்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இன்றைய நான்காவது பங்குனித் திங்கள் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
அத்தோடு ஏராளமான பகதர்கள் காவடி, பாற்செம்பு, எடுத்தும் பொங்கல், அன்னதானம் போன்ற நேர்த்திக்கடன்களில் ஈடுபட்டும் இருந்தனர்.
இதேவேளை ஆலய திருப்பணி வேலைகளிற்காக பாலஸ்தானம் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



