குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தை திருத்த நடவடிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
4 weeks ago
தற்போதைய குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கும் புதிய சட்டமூலமொன்றுக்கு பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரசிதழில் வெளியிடப்பட்ட மகளிர் அதிகாரமளிப்பு மசோதாவை தாக்கல் செய்த பின்னர், தேசிய மகளிர் ஆணையம் நிறுவப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், தற்போது, நாங்கள் பெண்கள் அதிகாரமளிப்பு மசோதாவை அரசிதழில் வெளியிட்டு, அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளோம்.
அனைத்தும் நடைமுறையில் உள்ளன. ஆனால், அதற்குள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றம் ஒரு புதிய யோசனையை முன்வைத்து, மாற்றங்களைச் செய்ததால், நாங்கள் மீண்டும் ஒரு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது”எனத் தெரிவித்துள்ளார்.