பொருளாதாரம் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை : ஷெஹான் சேமசிங்க!
பொருளாதாரம் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்களை சட்டமாக்குவதற்கான வரைவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி தயாராகவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த பொருளாதார சீர்திருத்தங்களை எந்த ஒரு குழுவும் மாற்றியமைக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதாரத்தின் நலன் கருதி எடுக்கப்பட்ட தீர்மானங்களின் பெறுபேறுகள் இன்று கிடைத்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் பலன்களை நாடு இன்று அனுபவித்து வருகிறது.
எனவே, அந்த மாற்றங்களை எதிர்காலத்திலும் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்." "ஜனாதிபதி மே மாதத்திற்குள் அனைத்து பொருளாதார சீர்திருத்தங்களையும் சட்டமாக நிறைவேற்ற உத்தேசித்துள்ளார். இது எதிர்காலத்தில் நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ளும்.
இதுதொடர்பான வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எட்டப்பட்ட பொருளாதார ஸ்திரத்தன்மை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்லப்படும். நெருக்கடிகளை எதிர்கொண்டு மீண்டும் வீழ்ச்சியடையாத நாடாக நாடு மாற்றப்படும் என்று நம்பப்படுகிறது.
நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் இருந்து எந்தவொரு குழுவும் விலகிச் செல்ல முடியாது. அதிலிருந்து விலக முற்பட்டால் நாடு பாரதூரமான நிலைக்கு செல்லும்” எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.