யாழ்ப்பாணத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!
#SriLanka
#Death
#Fisherman
Mayoorikka
2 years ago
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்புத்துறை கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரியகல்லாறு பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் கடலில் மீன்பிடிக்கச் சென்ற போது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.