ஈக்வடாரில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் 09 பேர் பலி!
#SriLanka
#Attack
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈக்வடாரின் கடலோர நகரமான குயாகுவிலில் ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் 09 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் அமெரிக்க நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது சகஜம் என்றாலும் இது சமீபத்திய தாக்குதலாகும்.
இருப்பினும் இந்த தாக்குதலுக்கு இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.
ஈக்வடார் ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்காவில் அமைதியின் கோட்டையாக கருதப்பட்டது, ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.