வவுனியாவில் வீடொன்றில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியா சமனக்குளம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 23 வயதுடைய யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி தூக்கிட்ட நிலையில் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிக் குளம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் கவிப்பிரியா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.